Home பிரதான செய்திகள் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 141 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 141 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.

by admin

மொகாலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141  ஓட்ட  வித்தியாசத்தில்   வெற்றியீட்டியுள்ளது.  நாணயச்சுழற்சியில் வென்ற    இலங்கை அணி களத்தடுப்பினை  தேர்வு செய்தது.  இந்தநிலையில் முதலாவதாக துடுப்பெடுதாடிய இந்திய அணி, அணித்தலைவர் ரோகித் ஷர்மாவின்  இரட்டை சதம் அடித்து, சாதனை படைத்துள்ள நிலையில்   50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 392  ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து  393 என்ற வெற்றி இலக்குடன்  துடுப்பெடுத்தாடிய   இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில்  8 விக்கெட்களை இழந்து 251  ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.   இந்தநிலையில் இந்திய அணி 141 ஓட்ட  வித்தியாசத்தில்  வெற்றியை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டு உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More