சினிமா பிரதான செய்திகள்

மகாபாரத்தின் ஆர்வத்தினால் இன்னொரு ஆச்சரியத்துக்கு தயாராகிவிட்ட அமிர்கான்


பொலிவுட்டில் வித்தியாசமான படங்களுக்கும் திறமையான நடிப்புக்கும் புகழ்பெற்ற நடிகர் அமிர்கானின் படங்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் சக்கை போடு போட்டு வசூல் சாதனைகள் படைக்கும். தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக சிரமப்படும் ஒரு சில நடிகர்களில் அமிர்கானும் ஒருவர்.

அதேவேளை அமிர்கான் தான் நடிக்கும் மற்றும் தயாரிக்கும் படங்களில் கதைக்களம் புதிதாகவும் இருந்தாலும் அவை பொழுதுபோக்கு படங்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். இந்தநிலையில் அமிர்கான் தற்போது இன்னொரு ஆச்சரியத்துக்கு தயாராகிவிட்டதாக பொலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அமிர்கான் தக்ஸ் ஒஃப் ஹிந்தொஸ்தான் என்ற படத்தில் அமிதாப் பச்சன், கத்ரீனா கைஃப் உள்ளிட்டோருடன் நடித்து வருகின்ற நிலையில் தொடர்ந்து வரும் படங்கள் எல்லாவற்றினையும் அவர் மறுத்துள்ளாராம். இதற்கு காரணம் அவர் அடுத்த பத்து வருடங்களுக்கு மகாபாரதம் கதையை அடுத்தடுத்த பாகங்களாக எடுக்கப் போகிறார் என்ற செய்திகள் உலவுகின்றன. இந்தப் படங்களை அமிர்கானே தயாரித்து நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

‘தக்ஸ் ஆஃ ஹிந்தொஸ்தான்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மகாபாரதக் கதைக்கான வேலைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும அமிர்கான் தயாரிப்பில் அத்வைத் சந்தன் இயக்குவார் எனவும் தெரிவிக்கப்படும் அதேவேளை அமிர்கான் கிருஷ்ணன் அல்லது கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.