குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
உணர்ச்சி பேச்சுக்களுக்கு இடமளிக்காது முதலமைச்சர் கூறியது போல சின்னங்களை பார்க்காது நல்ல மனிதர்களையும் சேவை மனப்பாங்குடையவர்களையும் பார்த்து வாக்களிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரிடம் வேட்பு மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
Add Comment