Home இலங்கை கிளிநொச்சியில் 9 அரசியல் கட்சிகளும், 1 சுயேட்சை குழுவும் போட்டி, – சுந்தரம் அருமைநாயகம்:-

கிளிநொச்சியில் 9 அரசியல் கட்சிகளும், 1 சுயேட்சை குழுவும் போட்டி, – சுந்தரம் அருமைநாயகம்:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன. அத்தோடு அன்னலெட்சுமி வனசுரா தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான சுந்திரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்

இன்று பிற்பகல் மாவட்டச் செயலகத்தில் இ்டம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவா் அதனை தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள 40 வட்டாரங்களில் ஒன்பது அரசியல் கட்சிகளையும், ஒரு சுயேட்சை குழுவையும் 341 வேட்பாளர்களும், 297 நியமன பிரதிநிதிகளும் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இதில் கரைச்சி பிரதேச சபைக்கு ஒன்பது அரசியல் கட்சிகளும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேட்சை குழுவும், பூநகரி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகளும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேட்சை குழுவும்,

பளை பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகளும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேட்சை குழுவும் என ஒன்பது அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன.

ஜக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திர சட்சி, தமிழரசுக் கட்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேட்சை குழு, ஜேவிபி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா பொதுஜன பெரமுன எனபனவே கிளிநொச்சியில் போட்டியிடுகின்றன. நடைபெறவுள்ள தேர்தலை அமைதியாகவும், சமாதானமாகவும், நீதியாகவும் நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுவும் தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறும்,

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More