குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் சோமாலிய அமைச்சர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தமைக்காக சோமாலியாவின் முன்னாள் அமைச்சர் ஒருவரையே காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
முன்னாள் அமைச்சரான அப்துர்ஹமான் அப்துஷாக்கர் ( Abdirahman Abdishakur ) கடந்த இரண்டு நாட்களாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சருக்கு எதிராக உரிய சாட்சியங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்வதாக முன்னாள் அமைச்சர் அப்துர்ஹமான் அப்துஷாக்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment