Home உலகம் ‘ஐயோ பதவியை நீடிச்சு போடாதீங்கோ  ஆளை விட்டா போதும்’

‘ஐயோ பதவியை நீடிச்சு போடாதீங்கோ  ஆளை விட்டா போதும்’

by admin

மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் அடுத்த வருடம் பதவிவிலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தனை நீடிக்குமாறு கோரிககை விடுக்காமலே அவர் பதவிவிலக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜோர்டான் இளவரசரும், முன்னாள் இராஜதந்திரியுமான சயிட் அல் ஹூசெய்ன் 2014ஆம் ஆண்டு செம்டெம்பர் முதலாம் திகதி மனித உரிமைப் பேரவையின் ஆணையாளராக பதவியேற்றிருந்தார். ஒரு பதவிக்காலம், 4 ஆண்டுகளைக் கொண்டது என்பதுடன் மேலும் இரண்டு தடவைகள் நீடிக்க கூடியதும் ஆகும. இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட, பல தலைவர்களுடன் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் பூகோள அரசியல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு பதவி விலக முடிவெடு;துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தனது முடிவை மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்துள்ள அவர் தற்போதுள்ள பூகோள அரசியல் நிலைமையில், அவ்வாறு இரண்டாவது தடவையாகப் பதவிக்குக் கோருவது, இரந்து கேட்பதாகவும், முன்னேற்றத்துக்கான கருத்துகளை மட்டுப்படுத்துவதாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது குரலின் சுயாதீனத்தையும் நற்பெயரையும் குறைப்பதாகவும் அமையும் எனவும் தனது குரலென்பது, உங்கள் குரலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது தடவையாக அவர் பதவிக்குக் கோரினாலும், ஐ.நா பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரத்தைக் கொண்ட ஐந்து நாடுகளும் அல் ஹூசெய்னுக்கு ஆதரவு வழங்குமா என்பது, சந்தேகத்துக்குரியது. இந்த 5 நாடுகளுக்கு எதிராகவும், கடுமையான விமர்சனங்களை அல் ஹூசெய்ன் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More