92
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 20 பேர் வரையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பு பேணிய குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் பலரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக மலேசிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அபு சாயிப் ஆயுதக்குழுவிற்காக ஆட்களை சேர்த்த 50 வயதான பிலிப்பைன்ஸ் பிரஜை ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபர் அபு சயிப் இயக்கத்தின் முன்னாள் தலைவரது நெருங்கிய உறவினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love