Home உலகம் ஏமனில் கொலரா வாந்திபேதி நோய் நோயால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்:-

ஏமனில் கொலரா வாந்திபேதி நோய் நோயால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்:-

by admin

 

இரு வேறு அதிகார மையங்களின் ஆட்சி நிலவி வரும் ஏமன் நாட்டில் கொலரா வாந்திபேதி  நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது.  ஏமன் நாட்டு அரசுக்கெதிராக எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் தலைநகர் சனா பகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். ஹவுத்தி புரட்சிப் படையினரை விமான தாக்குதல் மூலமாக சவுதி தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டுப் படையினர் தாக்கிவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சனா நகரில் கொலரா நோய் படுவேகமாக பரவத் தொடங்கியதையடுத்து, ஆட்சி நிர்வாகத்தினை பொறுப்பேற்றுள்ள ஹவு அரசின் நிர்வாகம் சனா நகரில் அவசர நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தியது,

சனாவை கடந்து அருகாமையிலுள்ள ஏனைய நகர்களுக்கும் கொலரா நோய் வேகமாக பரவியது. இந்தவகையில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் முகாம்களில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தற்போதைய நிலவரப்படி, ஏமனில் சுமார் பத்து லட்சம் மக்கள் கொலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 76 லட்சம் மக்கள் கொலரா அபாயத்துக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது..

ஏமன் நாட்டில் வாழும் 2.6 கோடி மக்களில் 1.7 கோடி பேர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் போதிய ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் சிரமப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More