Home இலங்கை தமிழரசு கட்சி என்றுமே புலிகளை எதிர்த்ததில்லை:-

தமிழரசு கட்சி என்றுமே புலிகளை எதிர்த்ததில்லை:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

தமிழரசு கட்சி என்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படவில்லை. என்றைக்கும் விடுதலைப்புலிகளை புறக்கணிக்கவில்லை. என தமிழரசு கட்சியின் இணை செயலாளரும், வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகளின் போராளிகளுக்கு ஆசனம் ஏன் வழங்க வில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவ்வாறு பதில் அளித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில, விடுதலை புலிகள் அமைப்பையோ, அதன் உறுப்பினர்களையோ என்றைக்கும் தமிழரசு கட்சி புறக்கணிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் ஆசனம் கேட்டது உண்மை அப்போதைய சூழலில் அதனை வழங்க முடியவில்லை.

இருந்த போதிலும் தேர்தலுக்கு பின்னரான கால பகுதி முதல் தற்போது வரை நாம் ஜனநாயக போராளிகள் கட்சியுடன் நெருக்கமாகவே உள்ளோம். என தெரிவித்தார். அதன் போது, விடுதலை புலிகளின் உண்மையான போராளிகள் போரிட்டு வீரச்சாவடைந்துள்ளனர். ஏனையோர் ” சைனட் ” கடித்து வீரசாவை தழுவிக்கொண்டனர் என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போது ,

அது குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து. தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. அதனை அவர்கள் தெரிவிக்கலாம். அது கட்சியின் கருத்தல்ல. தமிழரசு கட்சி என்றைக்கும் விடுலை புலிகளை எதிர்த்தது இல்லை என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More