Home சினிமா சல்மான்கான், ஷில்பா ஷெட்டி மீது காவல்துறையில் முறைப்பாடு

சல்மான்கான், ஷில்பா ஷெட்டி மீது காவல்துறையில் முறைப்பாடு

by admin


சாதி உணர்வை காயப்படுத்தியதாக நடிகர் சல்மான்கான், நடிகை ஷில்பா ஷெட்டி மீது மும்பை செய்யப்பட்டள்ளது. அத்துடன் ராஜஸ்தானில் தியேட்டர்களும் சூறையாடப்பட்டன.இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த டைகர் ஜிந்தா ஹை படம் கடந்த வெள்ளிக்கிழii வெளியிடப்பட்டது. இதற்கு முன்னதாக இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சல்மான்கான் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை காயப்படுத்தும் விதத்தில் அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், அந்த சமுதாய மக்கள் மும்பை பாந்திராவில் உள்ள சல்மான்கானின் வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசியல் கட்சியினரை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். நடிகர் சல்மான்கான் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது கைது செய்து அழைத்து சென்றனர்.

இதேபோல், நடிகை ஷில்பா ஷெட்டியும் தொலை க்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போது, சாதி உணர்வை காயப்படுத்தும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது.இதனால் சல்மான்கான் மற்றும் ஷில்பா ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை ராஜஸ்தான் மாநிலத்தில் டைகர் ஜிந்தா ஹை படம் வெளியான தியேட்டர்களை குறிப்பிட்ட அந்த சமூகத்தினர் அடித்து நொறுக்கி சூறையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜெய்ப்பூரில் சல்மான்கான் சுவரொட்டிகளும் கிழிக்கப்பட்துடன் கட் அவுட்டுகளுக்கு செருப்பு மாலை அணிவித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More