Home இலங்கை வடமாகாணத்தில் இயங்கும் அனைத்து அரச பாடசாலைகளையும் காலை 8 மணிக்கு ஆரம்பிக்க முயற்சி….

வடமாகாணத்தில் இயங்கும் அனைத்து அரச பாடசாலைகளையும் காலை 8 மணிக்கு ஆரம்பிக்க முயற்சி….

by admin

வடமாகாணத்தில் இயங்கும் அனைத்து அரச பாடசாலைகளையும் எதிர்வரும் 12018ஆம் ஆண்டிலிருந்து காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண சபை அவதானம் செலுத்தியுள்ளது.

வடமாகாண உறுப்பினர்கள் பலர் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் கந்தையாவை சந்தித்து இதுதொடர்பில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தற்போது வடமாகாண பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்தநிலையில் இதுதொடர்பில் வடமாகாண ஆளுநரின் அனுமதியுடன் தேவையான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் கல்வி அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பாடசாலை ஆரம்பிக்கும் முன்பதாக தீர்வினை வழங்குமாறு யோசனையை முன்வைத்துள்ள வடமாகாண சபை உறுப்பினர்கள் வடமாகாண கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More