Home உலகம் தன்சானியாவில் கடத்தப்பட்ட பெரும் பணக்காரரான முகமது டியூஜி விடுவிக்கப்பட்டுள்ளார்.

தன்சானியாவில் கடத்தப்பட்ட பெரும் பணக்காரரான முகமது டியூஜி விடுவிக்கப்பட்டுள்ளார்.

by admin


தன்சானியாவில் கடத்தப்பட்ட பெரும் பணக்காரரான முகமது டியூஜி(Mohammed Duji)  பத்து நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆபிரிக்காவிலேயே இளம் கோடீஸ்வரர் எனத் தெரிவிக்கப்படும்  43 வயதான முகமது டியூஜி தன்சானியாவின் முக்கிய நகரமான டர் எஸ் சலாமில் வைத்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தாம் பத்திரமாக வீடு திரும்பியுள்ளதாக அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எனினும் இவரை யார் கடத்தியது, எவ்வாறு விடுவிக்கப்பட்டார் எனும் தகவல்கள் வெளியாகவில்லை. அவரது சொத்து மதிப்பு 1.5 பில்லியல் டொலர்கள் என குறிப்பிட்டுள்ள போர்ப்ஸ் பத்திரிகை, தன்சானியாவின் ஒரே கோடீஸ்வரர் இவர்தான் என விவரித்துள்ளது.

தனது பரம்பரை தொழிலான சில்லறை வியாபாரத்தை முகமது டியூஜி, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறும் தொழில் சாம்ராஜ்யமாக மாற்றியுள்ளார் எனவும் விவசாயம், போக்குவரத்து, உணவு, உடைகள், மதுபானங்கள் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை ஆபிரிக்கா முழுவதிலும் இவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More