Home இலங்கை இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் மீதும், யஸ்மீன் சூகா மீதும் மைத்திரிக்கு கடும் கோபம்…

இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் மீதும், யஸ்மீன் சூகா மீதும் மைத்திரிக்கு கடும் கோபம்…

by admin


இலங்கை இராணுவ அதிகாரியை மாலியிலிருந்து திருப்பியழைக்குமாறு ஐநா விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரி தொடர்புபட்ட விவகாரத்தில் இலங்கை மனித உரிமை ஆணையகத்துக்கு உள்ள தொடர்பு குறித்தும் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மீன் சூகா முன்வைத்த குற்றச்சாட்டுகளே இராணுவ அதிகாரியை திருப்பி அழைக்குமாறு ஐநா விடுத்துள்ள வேண்டுகோளுக்கு காரணம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் இராணுவ அதிகாரியை விலக்கிக்கொள்ளுமாறு எங்கள் மனித உரிமை ஆணையகமே வேண்டுகோள் விடுத்திருந்தால் அது துரதிஸ்டவசமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார  எனினும் இலங்கை மனித உரிமை ஆணையகம் முன்வைத்த குற்றச்சாட்டுகளே இராணுவ அதிகாரி குறித்த சர்ச்சைக்கு காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More