Home இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசை விட தற்போதைய அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்படுகின்றது

மனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசை விட தற்போதைய அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்படுகின்றது

by admin

மனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசை விட தற்போதைய அரசாங்கம் அதிக கரிசனையுடன் செயற்படுகின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

‘முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இஸ்லாமிய சமுதாயம் நிகழ்த்தும் நினைவேந்தல்’ நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வதற்காக இன்றையதினம் இந்தியா சென்றுள்ள அவர் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக இந்திய அகதிமுகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களை மீள்குடியேற்றுவதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அடிப்படை மனித உரிமைகள் விடயத்தில் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசு அதிக கரிசணையுடன் செயற்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்

மேலும் தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையிலுள்ள இழுபறி நிலைக்கு தீர்வுகாணவேண்டும். இதற்காக இரு நாடுகளின் மீனவ சங்கங்கள் உள்ளடங்கலாக வெளியுறவு அமைச்சு மட்டத்திலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களின் சிபார்சுகளில் நாங்கள் தீவிர கரிசணை செலுத்திவருகிறோம். இலங்கை, இந்திய நாடுகளின் உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையிலும் சுமூகமானதொரு தீர்வை நாங்கள் மேற்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More