Home இலங்கை கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் போராட்டம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் 618 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு இன்னமும் தீர்வு கிடைக்க வில்லை எனக் தெரிவித்து கிளிநொச்சி வைத்தியசாலை அருகில் அமைந்துள்ள அவர்களது அலுவலக முன்றலில் இன்று 30-10-2018 காலை பத்து மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேசமே கண்மூடி தூங்குகின்றாயா சர்வதேசமே எமது உறவுகளை மீட்டுத்தா , உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடனும் கோசங்களுடனும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இக் கவனயீர்ப்புப் போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த போராட்டம் இடம்பெற்றது

  

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More