Home உலகம் பாகிஸ்தானில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த பாடசாலை அதிபருக்கு 105 ஆண்டுகள் சிறை :

பாகிஸ்தானில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த பாடசாலை அதிபருக்கு 105 ஆண்டுகள் சிறை :

by admin


பாகிஸ்தானில் பாடசாலையில் 18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு ஒன்று தொடர்பில் பாடசாலை அதிபருக்கு 105 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெஷாவரை சேர்ந்த அத்தாவுல்லா மார்வத் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அவற்றை ரகசியமாக வீடியோ எடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வந்தநிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்றையதினம் தீர்ப்பளிக்கப்பட்டது.  அதில் பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 105 ஆண்டு சிறைத்; தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 14 லட்சம் ரூபா அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More