Home இலங்கை நாட்டின் அரசியல் மாற்றத்தை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பயன்படுத்த வேண்டும்..

நாட்டின் அரசியல் மாற்றத்தை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பயன்படுத்த வேண்டும்..

by admin

நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான விடயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஒருவர் இருக்கும்போது அப் பிரதமரை பதவி நீக்கம் செய்து புதிய பிரதமரை தெரவு செய்துள்ளமை சட்டரீதியான பார்வைக்குள் உள்வாங்கப்படுவதோடு, பாராளுமன்றத்திலும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேவையென நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டால் சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக, மலையகக்கட்சிகள், முஸ்லிம் கட்சிகள், வடகிழக்கிலுள்ள கட்சிகள் தங்களுடைய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வைத்துக் கொண்டு பேரம் பேசுகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இது சிறுபான்மை இனத்திற்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமாகும். இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு.

எனவே இச் சூழலை புரிந்து கொண்டு எழுந்தமனமாக முடிவெடுக்காமல் தனிநபர் போக்கிற்கு விட்டு விடாமல் சகல கட்சிகளும் கூடிப்பேசி, நடைமுறைக்குச் சாத்தியமான விடயங்களை கையில் எடுத்துக் கொண்டும் மக்களின் நலன்கள் தொடர்பான விடயங்களை உத்தரவாதப்படுத்தி அமுல்படுத்துவதற்கும் உள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More