Home உலகம் வடகொரியாவில் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகளை குற்றமாக அறிவிக்க வேண்டும் ::

வடகொரியாவில் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகளை குற்றமாக அறிவிக்க வேண்டும் ::

by admin


வடகொரியாவில் சிறைகளில் உள்ள பெண்கள் பாதுகாபபு உத்தியோகத்தர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட பல தரப்பட்டவர்களால் பாலியல் வன்முறைக்குள்ளவது வழமையான விடயமாகிவிட்டது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

2011 இல் கிம் ஜொங் உன் புதிய பிரதமராக பதவியேற்றதன் பின் வடகொரியாவிலிருந்து தப்பியோடியவர்கள் தெரிவித்த தகவல்களை அடிப்படையாக வைத்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இதனை தெரிவித்துள்ளது.

மேலும் வடகொரிய அதிகாரிகள் எவ்வித தண்டனையும் அனுபவிக்காமல் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர்கள் தங்களை விளையாட்டுப்பொருளாhக கருதுகின்றனர் எனவும் தாஙகள் ஆண்களின் தயவில் இருக்கின்றோம் எனவும் 40 வயதான பெண் கைதெயொருவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரியொருவர் ஒரு பெண்ணை தனது பாலியல் இச்சைக்காக தெரிவு செய்யும்போது அதனை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லாத சூழ்நிலை காணப்படுகின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வடகொரிய அரசாங்கம் இவ்வாறான பிரச்சினை காணப்படுவதை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் இவ்வாறன நடவடிக்கைகளை குற்றமாக அறிவிக்க வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More