Home இலங்கை மகிந்தவின் பக்கம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மூவர் வருவார்கள் :

மகிந்தவின் பக்கம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மூவர் வருவார்கள் :

by admin

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னையும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் இவ்வாறு குறிப்பிட்டுச் சில மணிநேரங்களிலேயே வியாழேந்திரன் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அவ்வாறாயின் இன்னமும் இருவர் மகிந்த அணியின் பக்கம் தாவ உள்ளனரா என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களே பிரதமர் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை காட்டுவதற்கு மகிந்த தரப்பும், ரணில் தரப்பும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். இதேவேளை வியாழேந்திரனை மகிந்தவின் பக்கம் பேசிய அழைத்தது தானே என்றும் கருணா கூறியுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கை அரசியலில் திடீர் மாற்றம் ஏற்படும் என்று தான் எதிர்வு கூறிய வகையிலேயே பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கருணா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More