Home இலங்கை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் எப்போதும் எங்களுக்கு எதிராகவே உள்ளனர்

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் எப்போதும் எங்களுக்கு எதிராகவே உள்ளனர்

by admin


மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்காக விரைவில் தேர்தல்கள் இடம்பெறவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் எப்போதும் தங்களிற்கு எதிராகவே உள்ளனர் எனவும் எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தற்போது பிளவுபட்டுள்ளதால் நாட்டை நேசிக்கும் எவராவது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தால் அவர்கள் மகிந்த ராஜபக்சவுடன் இணைவார்கள் எனவும் கோத்தாபய தெரிவித்துள்ளார்.

அத்துடன் மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரச்செய்வதற்காக பணம் வழங்குவதாக தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லை எனவும் கோத்தாபய தெரிவித்துள்ளார்.

இது ஒரு குறுகிய காலத்திற்கான அரசாங்கம் எனவும் நாடு பயணித்துக்கொண்டிருந்த பாதையிலிருந்து அதனை காப்பாற்றுவதற்கு மக்கள் விரும்பியதன் காரணமாக கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி அரசினை கவிழ்த்ததாகவும் எனினும் தேர்தல்கள் மூலம் மக்கள் ஆணை கிடைப்பது அவசியம் எனவும் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More