Home இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்குவது குறித்து இறுதி தீர்மானம் இல்லை

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்குவது குறித்து இறுதி தீர்மானம் இல்லை

by admin


நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்குவது குறித்து இன்னமும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஸ பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், பதவியேற்ற பல புதிய அமைச்சர்களின் பதவியேற்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பத்திரம் இதுரை நாடாளுமன்றத்துக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களிலும் மேலும் பலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள நிலையில், உறுப்பினர்கள் ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சியுடன் இணையும் சந்தர்ப்பம் உள்ளதால், நாடாளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்க முடியாதுள்ளதாகவும் , நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில், 13ஆம் திகதியளவிலேயே ஆசனங்கள் ஒதுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய சபாநாயகரை நீக்க வேண்டுமெனில் அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More