Home இலங்கை இலங்கையில் இடம்பெற்றது ஆயுதமற்ற சதிப்புரட்சி..

இலங்கையில் இடம்பெற்றது ஆயுதமற்ற சதிப்புரட்சி..

by admin


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில்விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதை ஆயுதங்களை பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி என சபாநாயகர் கருஜெயசூரிய வர்ணித்துள்ளார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தூதரகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் விடயங்களை சதிப்புரட்சி என்றே வர்ணிக்கலாம் என ஐந்தாம் திகதி வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தூதரகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள சபாநாயகர் துப்பாக்கிகளையும் டாங்கிகளையும் பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதி புரட்சி என குறிப்பிடலாம் எனவும் தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.

இந்த முழு விடயங்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என தெரிவித்துள்ள சபாநாயகர், ஜனாதிபதி சிறிசேன வெளிப்படைதன்மை,ஒழுக்கம் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றிற்கு மாறாக நடந்துகொள்கின்றார் எனவும், சிறிசேன தான் நிலைநிறுத்துவதாக சத்தியப்பிரமாணம் செய்த அரசமைப்பிற்கு முரணாக நடந்துகொள்கின்றார் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More