Home இந்தியா சந்திரபாபு நாயுடு – ஸ்டாலினுடன் சந்திப்பு

சந்திரபாபு நாயுடு – ஸ்டாலினுடன் சந்திப்பு

by admin

ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.  பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் விடயங்கள் தொடர்பில் பேச்சுக்களை நடாத்தவே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனக் கூறி பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அண்மையில் விலகி இருந்தார்.  இதன் பின்னர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பிரகாரம் அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சு வார்த்தைகளில் சந்திரபாபு ஈடுபட்டதுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் முதலியோரையும் சந்தித்தார்.

ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ் ஆகியோரையும் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவே கவுடா மற்றும் கர்நாடக முதலமைவ்வர் குமாரசாமி ஆகியோரை நேற்று சந்தித்தார்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு இன்று மாலை திமுக தலைவர் முக ஸ்டாலினை சென்னையில் வைத்து சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது ஆந்திர முதல்வருக்கு ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது துரை முருகன், ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் உடனிருந்தனர். பாஜகவுக்கு எதிராக ஓரணியாக இணைவது குறித்து ஸ்டாலினும், நாயுடுவும் இதன்போது பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More