Home இலங்கை மட்டக்களப்பில் தொடரும் மழை காரணமாக 16,632 குடும்பங்கள் பாதிப்பு :

மட்டக்களப்பில் தொடரும் மழை காரணமாக 16,632 குடும்பங்கள் பாதிப்பு :

by admin


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் சில பகுதிகள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. வீதிகளில் வெள்ளம் பாய்வதனால் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த அனர்த்தத்தில்  16,632 குடும்பங்களைச் சேர்ந்த 57, 051 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறுகின்றது.

வெள்ளப் பெருக்கினால் இடம்பெயர்ந்த 242 குடும்பங்களைச் சேர்நத  691 நபர்கள் 3 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்ட்டுள்ளனர். இதேவேளை மட்டக்களப்பில் தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறு மூலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகமும்  வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2, 296 குடும்பங்களைச் சேர்ந்த 8, 564 நபர்களும கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1, 166 குடும்பங்களைச் சேர்ந்த 4, 075 நபர்களும், கோறளைப்பற்று செயலாளர் பிரிவில் 924 குடும்பங்களைச் சேர்ந்த 2, 989 நபர்களும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 2, 916 குடும்பங்களைச் சேர்ந்த 9, 877 நார்களும், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1646 குடும்பங்களைச் சேர்ந்த 5853 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 4, 260 குடும்பங்களைச் சேர்ந்த 13, 923 நபர்களும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 486 குடும்பங்களைச் சேர்ந்த 1, 669 நபர்களும், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 405 குடும்பங்களைச் சேர்ந்த 1, 592 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 137 குடும்பங்களைச் சேர்ந்த 546 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 604 குடும்பங்களைச் சேர்ந்த 2, 167 நபர்களும், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1, 112 குடும்பங்களைச் சேர்ந்த 3, 670 நபர்களும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 1, 037 நபர்களும், மண்முனை தென்கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 86  குடும்பங்களைச் சேர்ந்த 294 நபர்களும், போரதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 260 குடும்பங்களைச் சேர்ந்த 795 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள அனர்த்தம் காரணமாக 27 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More