Home இலங்கை மகிந்த பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மீது கெடுபிடிகள்

மகிந்த பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மீது கெடுபிடிகள்

by admin


மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றதன் பின்னர், அவரின் பாதுகாப்பினை காரணம் காட்டி ஊடகவியலாளர்கள் மீது பல்வேறு கெடுபிடிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஸவின் ஊடகவியலாளர் சந்திப்புக்களுக்கு செல்லும் ஊடகவியலாளர்கள் கைபேசி எடுத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால், ஊடகவியலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது

ஊடகவியலாளர்களில் பலர் ஒலிப்பதிவுக் கருவியை பயன்படுத்தாமல் தங்களது கைபேசிகளிலேயே செய்திகளை பதிவு செய்து வருகின்ற நிலையில், பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்புக்களுக்குச் செல்லும் ஊடகவியலாளர்கள் கைபேசிகளை அலுவலகத்தின் உள்ளே எடுத்துச் செல்வதற்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
எனினும் இன்றையதினம் மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியில் இணைந்துகொண்ட நிகழ்வுக்கு சென்றிருந்த ஊடகவியலாளாகளுக்கு கைபேசியை உள்ளே எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு மட்டும் கைபேசிகளை உள்ளே எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தமையும் ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More