Home சினிமா ‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி

‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி

by admin


சசிகுமார் நடிக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ திரைப்படத்தின் படப்பிடிப்பை இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி ஆரம்பித்து வைத்தார். இந்தர்குமாரின் ரெதான் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் திரைப்படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.  ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சசிகுமார் நடிக்க இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இத் திரைப்படத்தை இயக்குகிறார்.

1990-1994 காலப்பகுதியில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் பெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமானுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.

காரைக்குடியில் இன்று ஆரம்பிக்கப்பட்ட ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பை நடிகர், இயக்குனர் சமுத்திரகனி ஆரம்பித்து வைத்தார். இப்படத்திற்கான படப்பிடிப்புக்கள்  பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் தொடர்ந்து நடைபெறுவதுடன் குற்றாலத்தில் நிறைவடையவுள்ளதாக படக் குழு கூறுகின்றது. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தோமஸ் இசையில், டான் பாஸ்கோ படத்தொகுப்பில் இப்படம் உருவாகி வருவதாகவும் படக் குழு குறிப்பிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More