Home இலங்கை ஜனாதிபதியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம்

ஜனாதிபதியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம்

by admin


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை சிறுபான்மை கட்சித் தலைவர்களான மனோ கணேசன், ரிஷாத் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தநிலையில் பாராளுமன்றத்தில், 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை நிறைவேற்றி உள்ளனர் எனவும், எனவே இன்று நாட்டில் ஒரு பிரதமரோ, அமைச்சரவையோ கிடையாது என்னும் நிலையில் ஜனாதிபதி உடனடியாக புதிய பிரதமரையும், அமைச்சர்களையும் நியமிக்க வேண்டும் என ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ள மனோ கணேசன்

ஜனாதிபதி, இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவருடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இனி நடத்தப்படாது என்பதனைத் தாம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில், சபாநாயகர், ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உட்பட கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்ததுடன், இதற்கான அழைப்பு தமக்கு கிடைத்துள்ளதாகவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

எனினும் நேற்றிரவு, ஜனாதிபதி, நம்பிக்கை இல்லா பிரேரணையை நிராகரித்து, ஒரு கடிதத்தை, சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை தாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் தாம் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் பாராளுமன்றம் செல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More