Home இலங்கை மஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..

மஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..

by admin


மஹிந்த ராஜபக்ஸவுடன் காரசாரமாக உரையாடிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளியதுடன் தாக்குவதற்கு முற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஏற்பட்ட அமளிதுமளியின்போது சபாநாயகரை அரச தரப்பினர் தாக்க முற்பட்டுக்கொண்டிருந்த நிலையில் அது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸவுடன் அவரது ஆசனத்துக்கு அருகில் சென்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க காரசாரமாக பேசிக்கொண்டு இருந்த போது குறுக்கே சென்ற அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின் மகனுமான லோஹான் ரத்வத்த சம்பிக்க ரணவக்கவை நெஞ்சில் பிடித்து தள்ளியதுடன் அவரை தாக்கவும் முற்பட்டுள்ளார்.எனினும் இந்த வேளையில் அதனைக் குறுக்கிட்டு தடுத்த மஹிந்த ராஜபக்ஸ ரோஹான் ரத்வதவை அகன்று செல்லுமாறு குறிப்பிட்டு சம்பிக்கவை தன்னருகே அழைத்து கைலாகு கொடுத்து தோளில் தட்டி சமாதானப்படுத்தியுள்ளார்.

இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரச தரப்புக்கு தாவிய ஆனந்த அளுத்கமகே, தன்னை மறந்த நிலையில் கூக்குரல் இட்டும் பலரை தாக்கவும் முட்பட்டுகொண்டிருந்த வேளை? நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் சமாதானப்படுத்த முயற்சித்த போது அவரை தாக்க அளுத்கமகே முற்பட்டிருந்தார். எனினும் ஏனைய சில உறுப்பினர்கள் அதனை தடுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More