இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் ஜனநாயகத்திற்கு இன்றைய நாள் மிகமோசமானது…

இன்றைய நாள் இலங்கையில் ஜனநாயகத்திற்கு மிகமோசமான நாள் என ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே Jorn Rohde தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட அவர்,  இலங்கைக்கு என நீண்ட கால ஜனநாயக பாரம்பரியம் உள்ளது எனவும்  சபாநாயகர் மீது பொருட்களை வீசுவதும் வாக்களிப்பை தடுப்பதும் ஜனநாயகநாடொன்றிற்கு பொருத்தமான நடவடிக்கையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் எந்த தனிநபரையும் விட வலிமையான  சுயாதீன அமைப்புகள் ஜனநாயகத்திற்கு அவசியம் என  தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வருத்தத்திற்குரிய சம்பவங்களை பார்வையிட்ட பின்னரே ருவிட்டரில் இதனை பதிவுசெய்துள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு பாலங்களை கட்டியெழுப்புவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.