Home இலங்கை வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் 97 மில்லியன்கள் வழங்கியுள்ளது

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் 97 மில்லியன்கள் வழங்கியுள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது என ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஐந்தாம் திகதி கொழும்பில் ஜப்பானிய தூதுவருக்கும், ஹலோ ட்ரஸ்ட் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் அதிகாரிக்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் வடக்கில் யாழப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. 2020 கண்ணி வெடி அற்ற இலங்கை எனும் இலங்கை அரசின் இலக்கை நோக்கி பயணிப்பதற்கு யப்பானிய அரசின் இவ்வுதவி பெரும் பங்களிப்பை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More