Home இலங்கை பாராளுமன்றம் கூடியுள்ளநிலையில் அமளிதுமளி

பாராளுமன்றம் கூடியுள்ளநிலையில் அமளிதுமளி

by admin


பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியுள்ள நிலையில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் மகிந்தராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலித தேவரப்பெரும கைதுசெய்யக் கோரியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் தற்போது பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் அவர்கள் தமது ஆசனங்களில் அமர்ந்திருந்து அமளிதுமளியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாராளுமன்ற அமர்வுக்காக இன்று செல்லும் ; உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னர் அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More