Home இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்கும் சபாநாயகர்

ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்கும் சபாநாயகர்

by admin

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வ கட்சித் தலைவர்களையும் இன்று சந்தித்து உரையாட உள்ள நிலையில் இச் சந்திப்பினை சாநாயகர் கரு ஜெயசூரிய புறக்கணிக்கவுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  குறித்த கலந்துரையாடலில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதியிடம் சபாநாயகர் எடுத்துரைத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி சூழலை தீர்க்கும் முகமாக இன்று மாலை ஐந்து மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துக் கட்சிகளுக்கான சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் இச் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே இச் சந்திப்பை புறக்கணிக்கவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More