Home இலங்கை பொதுதேர்தலை நடாத்துவது ஜனாதிபதி – பிரதமரின் ஒரே நோக்கம் :

பொதுதேர்தலை நடாத்துவது ஜனாதிபதி – பிரதமரின் ஒரே நோக்கம் :

by admin

பொதுத்தேர்தலை நடத்துவதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரது ஒரே நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது, நாட்டில் எழுந்துள்ள அரசியல் பிரச்சினைகள் அனைத்துக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஒருவரே காரணம் எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ஸ , சபாநாயகர் நிகழ்ச்சி நிரலில் ஒன்றினை கூறிவிட்டு பின்னர் அதற்கு முரணான வகையில் நிலையியற் கட்டளைச் சட்டத்தையும் மதிக்காமல் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

இவ்வாறு ஒவ்வொரு தரப்பினரும் வௌ;வேறு விதமாக செயற்பட்டால் நாட்டில் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் தற்போதைய பிரச்சினைக்கு தேர்தல் ஒன்றே தீர்வு எனவும் அவர் தெரிவித்தார். இதனால் பிரதமரும் ஜனாதிபதியும் நாட்டில் தேர்தல் ஒன்றினை நடத்துவதனை மாத்திரம் நோக்காக கொண்டு செயற்படுவதாகவும் நாமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More