Home உலகம் ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்கெயிம் பதவிவிலகல்

ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சொல்கெயிம் பதவிவிலகல்

by admin

ஐநா விதிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பதவிவிலகியுள்ளார். கென்யாவின் நைரோபி நகரை தலைமையிடமாக கொண்டு செயற்படும் ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த நோர்வேயைச் சேர்ந்த எரிக் சொல்கெயிம் தனது அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக 5 லட்சம் அமெரிக்க டொலர்களை செலவிட்டமை அந்த அமைப்பின் தணிக்கையில் கண்டறியப்பட்டது.
மேலும், தனது பயணங்களுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாகவும் தணிக்கை அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு, நிதி பற்றாக்குறையில் உள்ள நிலையில், எரிக்கின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார். அவரது ஐநா பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டதாக ஐநா செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள், போலந்தில் அடுத்த மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் பதவி விலகல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எரிக் சொல்கெயிம் தனது செயல்கள் அனைத்தும் சுற்றுச்சுழல் நலனுக்காகவே இருந்தாக குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More