Home இலங்கை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் குடிநீரை நிறுத்தியமைக்காக சட்ட நடவடிக்கை

கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் குடிநீரை நிறுத்தியமைக்காக சட்ட நடவடிக்கை

by admin
கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்  ஹரீஸ் இடைநிறுத்தப்பட்ட குடிநீரை  மக்களுக்கு  தற்காலிகமாக  பெற்றுக் கொடுக்கப்பட்டதாக   தெரிவித்துள்ள செய்தியை ஆதாரங்களுடன் மறுத்துள்ளதுடன் பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்பி மக்களை குழப்பமடைய செய்ய வேண்டாம் என  கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட  தற்காலிக ஆதன முகாமைத்துவக் குழுவினர் கேட்டுள்ளனர்.
 இன்றைய தினம் (21) கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட  ஊடக  சந்திப்பில் மேற்கண்டவாறு இக்குழு தெரிவித்தது. மேலும் கருத்து தெரிவிக்கையில்
கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் 438 குடும்பங்கள் வாழ்கின்ற மக்களின்  அடிப்படை தேவையான குடிநீரை கடந்த 15.11.2018 திகதியில் இருந்து நிறுத்தியமைக்காக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். குறித்த குடிநீரை அம்மக்கள் பயன்படுத்தியதற்கு அமைய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டிய ரூபா 9,21,036/- செலுத்தப்படாமையால் நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இதனால் கடந்த சில நாட்களுக்கும் மேலாக அங்கு வாழும் மக்கள் குடிநீர் இல்லாமல் பெரும் அசௌகரியத்திற்குள்ளாகினர்.
இதற்கு காரணம்    கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தின் கடந்த பல வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த கல்முனை கிறீன்பீல்ட் கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவினர் அங்கு வாழும் மக்கள் குடி நீர் பட்டியலுக்கு செலுத்திய பெருந்தொகை பணத்தை கையாடல் செய்துள்ளமையும் தி டீரென அக்குழு செயலிழந்தமையும் ஆகும் என பாதிக்கப்பட்ட  அம்மக்கள் குற்றஞ்சுமத்துவதோடு  மேற்குறித்த  ஆதன முகாமைத்துவக் குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஒன்றை  மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
இதற்காக தற்காலிக ஆதன முகாமைத்துவக் குழுவினர் என மீண்டும்  ஒரு புதிய  அமைப்பினை உருவாக்கி  குறித்த பிரச்சினையை ஆராய்ந்து இன்று(21)  முதல் கட்டமாக மீண்டும்   மக்களுக்கு குடிநீர் பெற்றுக்கொள்வதற்கு  நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்க வேண்டிய ஒன்பது லட்சத்து இருபத்தோராயிரத்து முப்பத்தி ஆறு ரூபாய் பணத்தையும் (ரூபா 921036,- யும்) செலுத்த புதிய  இக்குழு மக்கள் ஆதரவுடன்  தற்போது களமிறங்க முடிவு  செய்துள்ளது.
இதன் படி அவ்வீட்டு திட்டத்தில் உள்ள 430 குடும்பங்களிடம் தலா 2500 ரூபா வீதம் வசுலித்து நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்க வேண்டிய ஒன்பது லட்சத்து இருபத்தோராயிரத்து முப்பத்தி ஆறு ரூபாய் பணத்தையும் (ரூபா 921036/- யும்) உடனடியாக மீள்செலுத்த  குறித்த தற்காலிக  குழு நாளை(22)  இரவு 9 மணிக்கு கால அவகாசம் கொடுத்துள்ளது.
இதன் படி குறித்த பணத்தை அப்பகுதி வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தமது காரியாலயத்தில் வந்து ஒப்படைத்து துண்டிக்கப்பட்டுள்ள அத்தியவசியமான குடிநீரை மீள பெற முன்வருமாறு அக்குழு கேட்டுள்ளது.
அத்துடன் குறித்த குழு ஊடக இன்றைய ஊடக  சந்திப்பில்  கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்  ஹரீஸ் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட குடிநீரை  மக்களுக்கு  பெற்றுக் கொடுக்கப்பட்டதாக  வந்துள்ள செய்தியை ஆதாரங்களுடன் மறுத்துள்ளதுடன் பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்பி மக்களை குழப்பமடைய செய்ய வேண்டாம் என கேட்டுள்ளது.
பாறுக் ஷிஹான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More