Home இலங்கை மனித உரிமைகள் -ஜனநாயகம் – சட்டத்தில் பாராளுமன்ற வகிபாகம் – இலங்கை குறித்து ஜெனீவாவில் விவாதம் :

மனித உரிமைகள் -ஜனநாயகம் – சட்டத்தில் பாராளுமன்ற வகிபாகம் – இலங்கை குறித்து ஜெனீவாவில் விவாதம் :

by admin

மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கை பாராளுமன்ற வகிபாகம் எனும் தலைப்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நாளை விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது. இதன்போது இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் ஸ்திரமின்மையும் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட சில மோதல்களும் உலகளவில் இலங்கைமீது அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் இலங்கை பாரதளுமன்றில் பல்வேறு ஜனநாயகம் மற்றும் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் வெளிநாடுகள் குற்றம் சுமத்திவந்தன.இந்நிலையில் நாளை 22 மற்றும் நாளை மறுதினம் 23 ஆம் திகதி வரையில் இடம்பெறும்விவாதம் காரணமாக இலங்கைக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விவாதத்தில் சிவில் சமூகத்தை சேந்தவர்களான நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசணைச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து, அசங்க வெலிகல, மனித உரிமை செயற்பாட்டாளரான ஷிரீன் சரூர், அலன் கீனாம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More