Home இந்தியா கஜா புயல் நிவாரண நிதி வழங்குமாறு மோடியிடம் கோரிக்கை…

கஜா புயல் நிவாரண நிதி வழங்குமாறு மோடியிடம் கோரிக்கை…

by admin


டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அறிக்கையை கையளித்து, நிவாரண நிதி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த பாதிப்புக்ளுக்குள்ளாகியுள்ளனர்.

உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், சேத மதிப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியை பெற்றுவருவதற்கும் முதலமைச்சர் உட்பட்ட உயர் அதிகாரிகள் சென்றிருந்தனர்.

அந்தவகையில் இன்று காலை பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து தமது மேற்படி கோரிக மனுவைக் கையளித்துள்ளனர். இதனடிப்படையில் தமிழக அரசின் கோரிக்கையின் அடிப்படையில், சேதங்களை மதிப்பிடுவதற்கு மத்திய அரசு தனது அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழகத்துக்கு அனுப்பி ஆய்வுகளை மேற் கொண்டு புயல் சேதங்களை அந்த குழு மதிப்பிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கும். அதன் பின்னர் தேவையான நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More