Home இலங்கை நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா மைத்திரியிடம் வலியுறுத்தல்

நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா மைத்திரியிடம் வலியுறுத்தல்

by admin


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் அமெரிக்கா இலங்கை மத்தியிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வலுப்படுத்துவதற்கு தடையாக அமையலாம் என அமெரிக்க செனெட் உறுப்பினர் கிறிஸ் வன் ஹொலன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரை பதவிநீக்குவது, பாராமன்றத்தை இடைநிறுத்துவது தேர்தலை நடத்த முயல்வது மற்றும் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் வாக்களிப்பை நிராகரிப்பது போன்ற செயற்பாடுகள் இவ்வாறு பாதிப்பினை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இரு ஜனநாயக நாடுகளுக்குமிடையில் நட்புறவை வலுப்படுத்துவதற்கு கடினமாக பாடுபட்ட நண்பருக்கு இந்த கடிதத்தை எழுதுகின்றேன் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த உணர்வின் அடிப்படையில் இலங்கை பிரதமரை பதவியிலிருந்து நீக்கியமை மற்றும் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு நம்பிக்கையில்லா தீர்மானங்களை நிராகரித்தமை குறித்த எனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசமைப்;பின் அடிப்படையிலும் சட்டத்தின் ஆட்சியை மதித்தும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் கிறிஸ் வன் ஹொலன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீங்கள் நல்லிணக்கம் ஜனநாயக சீர்திருத்தம் குறித்து வாக்குறுதி வழங்கிய 2015 தேர்தலிற்கு பின்னர் அமெரிக்க இலங்கை உறவுகள் வளர்ச்சியடைந்துள்ளன என தெரிவித்துள்ள அவர் 2015 க்குப் பின்னர் அமெரிக்கா பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகள் மூலம் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.

எனினும் கடந்த சில வாரங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More