Home இலங்கை இளைஞர்களை தலை கீழாக கட்டித் தூக்கி, அடித்து சித்திரவதை செய்தது, சுன்னாகம் காவல்துறை…

இளைஞர்களை தலை கீழாக கட்டித் தூக்கி, அடித்து சித்திரவதை செய்தது, சுன்னாகம் காவல்துறை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில். அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாக காவல்துறையினர் கைது செய்து செய்து காவல் நிலையம் அழைத்து சென்று தலை கீழாக கட்டி த்தூக்கி அடித்து சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ். பிராந்திய மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கபட்டவர்கள் தெரிவிக்கையில் ,

கடந்த 19ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் நானும் எனது மைத்துனரும் முச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது , வீட்டுக்கு அருகாமையில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த சுன்னாகம் காவல்துறையினர் நாம் பயணித்த முச்சக்கர வண்டியை மறித்து சோதனை யிட்டதுடன் , முச்சக்கர வண்டியை ஒட்டி சென்ற எனது மைத்துனரிடம் ஆவணங்களை வாங்கி அவற்றையும் பரிசோதித்தனர்.

பின்னர் பின்னால் இருந்த என்னிடம் அடையாள அட்டையை கேட்டனர். அப்போது என்னிடம் அடையாள அட்டை இல்லை. வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன் எனவும், வீட்டில் இருந்து எடுத்து வந்து காண்பிக்கின்றேன் என கேட்டதற்கு , அதனை ஏற்காத காவல்துறையினர் எம்மை முச்சக்கர வண்டியுடன் சுன்னாக காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று , மைத்துனை காவல்துறையினரின் சமையல் அறையில் அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்ததுடன் , என்னை தலைகீழாக கட்டி அடித்து சித்திரவதை செய்தனர்.

விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தனியா என கேட்டே என்னை தாக்கினார்கள். பின்னர் மறுநாள் 20ஆம் திகதி மாலை எவ்வித சட்ட நடவடிக்கையும் இல்லாது எம்மை விடுவித்தனர். பலத்த சித்திரவதைகள் , அடிகாயங்களுக்கு உள்ளான நாம் வலி தாங்க முடியாது 20ஆம் திகதியே தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்றோம்.

எம்மீதான தாக்குதல் மற்றும் சித்திரவதை தொடர்பில் யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். என தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்த பின்னர் குறித்த இளைஞனின் உடலை குளத்தில் வீசினார்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட அப்போதைய காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஆறு பேருக்கும் சித்திரவதை குற்றச்சாட்டுக்கு பத்தாண்டு சிறை தண்டனை யாழ்.மேல் நீதிமன்றினால் 2017.05.04ஆம் திகதி விதிக்கபட்டு உள்ளதுடன் , கொலை குற்றசாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran November 23, 2018 - 2:22 pm

அரச பயங்கரவாத, தீவிரவாத காவல்துறையால் கொடூர குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளது. இதை மாற்றி அமைக்க தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்க வேண்டும்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More