Home இலங்கை அச்சத்தின் குறியீடே மகிந்த…

அச்சத்தின் குறியீடே மகிந்த…

by admin

https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2246297098941112/

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி, மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் ஆட்சியென முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் சர்ச்சை தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “மஹிந்த இலங்கையை 10 வருடங்கள் ஆட்சி செய்த காலத்தில் அவர் அச்சத்தின் குறியீடாகவே திகழ்ந்தார். மேலும் கடந்த மூன்று வாரங்களில் நாடு முழுவதும் மீண்டும் அச்ச உணர்வை மஹிந்த ஏற்படுத்தியுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் மிகவும் தவறான முறையில் செயற்பட்டதை அனைத்து மக்களும் அவதானித்திருப்பார்கள். இந்நிலையில் நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ கடமைகளை பொறுப்பேற்றால் தமது சுதந்திரம் பறிக்கப்பட்டு, அச்சத்துடன் கூடிய சூழலில் வாழவேண்டி ஏற்படும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.  இந்த நிலையில் ஜனநாயகபூர்வமாக பெரும்பான்மையை மஹிந்த நிரூபித்தால் அலரிமாளிகையை அவர் பெறமுடியுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமையும் சனல் 4 தொலைக்காட்சியின் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More