80
சகல பிரதிக் காவல்துறைமா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர்கள் அனைவரும் நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக காவல் தலைமையக தகவல்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அழைப்பான காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love