Home இலங்கை ஆவா குழுவை சேர்ந்தவர் எனத் தெரிவித்து தேடப்பட்டவர் சரண்

ஆவா குழுவை சேர்ந்தவர் எனத் தெரிவித்து தேடப்பட்டவர் சரண்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆவா குழுவை சேர்ந்தவர் என தெரிவித்து காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த அசோக் எனும் நபர் தனது சட்டத்தரணி ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் புதன் கிழமை சரணடைந்துள்ளார். மானிப்பாய் மற்றும் சுன்னாகம் காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் குறித்த நபர் காவல்துறையினரினால் தேடப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் குறித்த நபரின் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சில காலமாக தலைமறைவாக இருந்தவர் இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More