Home சினிமா சர்காரை தொடர்ந்து புதிய படத்தில் மீண்டும் இணையும் விஜய் அட்லி!

சர்காரை தொடர்ந்து புதிய படத்தில் மீண்டும் இணையும் விஜய் அட்லி!

by admin



விஜய் – அட்லி மூன்றாவது தடவையாக இணையும் விஜயின் 63ஆவது திரைப்படத்தின்  படப்பிடிப்புக்கான கள அமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.   விஜய் நடிப்பில் மெர்சல், சர்கார் திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில் தற்போது அட்லி இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படமும் அடுத்த தீபாவளியை இலக்கு வைத்து உருவாகி வருகின்றது.

படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் ஏற்கெனவே ஆரம்பமான நிலையில் நேற்று படத்திற்கான பூஜை நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் படங்கள், முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் கலை இயக்குநர் முத்துராஜ் இப் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

‌ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் கலை இயக்கப் பணிகளை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்த அவர், தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தின் கலை இயக்கப் பணியையும் தொடங்கியுள்ளார். ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் நேற்று சென்னையில் படப்பிடிப்புக்கான அரங்கு அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தத் தகவலை முத்துராஜ் தனது ருவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அத்துடன் அட்லி இயக்கத்தில் உருவான ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய மூன்று படங்களுக்கும் முத்துராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றி உள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, விவேக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இத் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணுவும் சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசுவும் பணியாற்றுகின்றனர். விவேக் பாடல்களை எழுத, ரூபன் படத்தொகுப்பு பணிகளை ஆற்றுகிறார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More