இந்தியா பிரதான செய்திகள்

சேர்க்கசில் மிருகங்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை

சேர்க்கசில் நாய், குதிரை, யானை போன்ற மிருகங்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. சேர்க்கசில் மிருகங்களை கூண்டில் அடைத்து சித்ரவதை செய்யக்கூடாது என சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியதனால் அதற்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும் நாய், யானை, குதிரை போன்ற மிருகங்களை வைத்தும் கிளிகளை வைத்தும் வேடிக்கை காட்டி வந்தநிலையில் தற்போது அதற்கும் தடை வருவுள்ளது. மிருக பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு ஏற்கனவே அனைத்து வகையான மிருகங்களையும் சேர்க்கசில் காட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய மத்திய அரசு புதிதாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் மிருகங்களை காட்சி பொருளாகவோ, சித்ரவதை செய்து துன்புறுத்துவதை தடை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது

இதனை சேர்க்கசில் அமுல்ப்படுத்த வேண்டும் என் வனவிலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளமனையடுத்து சேர்க்கசில் நாய், குதிரை, யானை போன்ற மிருகங்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.