Home இலங்கை வவுனதீவு இரு  காவற்துறையினர்  படுகொலை கிளிநொச்சியில் முன்னாள் போராளி சரண்…

வவுனதீவு இரு  காவற்துறையினர்  படுகொலை கிளிநொச்சியில் முன்னாள் போராளி சரண்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

மட்டக்களப்பு வவுனதீவில் இரண்டு காவற்துறையினர்   படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிளி நொச்சியி காவவல்  நிலையத்தில் முன்னாள் போராளி ஒருவர் இன்று(01.12.18) காலை சரணடைந்துள்ளார்.

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு காவற்துறையினர்   சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்வதற்கு காவற்துறையினர்   இடையூறு வழங்கியதனால் பழிவாங்குவதற்காக இடம்பெற்றிருக்கலாம் என கருதி விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார் இவருடன் பணியாற்றியவர்களை கைது செய்ய காவற்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர் அந்த வகையில் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரும் பணியாரியதாக கூறி நேற்று அவரை கைது செய்வதற்காக கிளிநொச்சிக் காவற்துறையினரின்   விசேட குழு ஒன்று தேடுதல் மேற்கொண்டு வந்த நிலையில் அவர் இன்று(1) காலை கிளிநொச்சிப் காவற்துறை   நிலையத்தில் சரணடைந்துள்ளார்

சரணடைந்தவர் முன்னாள் போராளியான வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய  இராசநாயகம் சர்வானந்தன்  என்பவர் என கிளிநொச்சிப் காவற்துறை   வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன இவரது வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதன் பின்னர் சிஐடியிடம் காவற்துறையினர்   பாரப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More