Home இலங்கை சாவகச்சேரியில் ATM இல் போலி அட்டை மூலம் பணம் பெற முயன்றவர் கைது

சாவகச்சேரியில் ATM இல் போலி அட்டை மூலம் பணம் பெற முயன்றவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


சாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) போலி அட்டையை செலுத்தி பணம் பெற முயன்ற நபர் ஒருவரை சாவகச்சேரி காவல்துறையினர்; கைது செய்துள்ளனர். குறித்த வங்கியின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM ) இன்று காலை நபர் ஒருவர் போலி அட்டையை பயன்படுத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ள நிலையில் வங்கி முகாமையாளருக்கு இயந்திரம் அபாய ஒலி மூலம் தெரியப்படுத்தி உள்ளது.

அதனை அடுத்து துரிதமாக செயற்பட்ட முகாமையாளர் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்; சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது சந்தேக நபர் காவல்துறையினரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

எனினும் காவல்துறையினர் சந்தேக நபரை துரத்தி சென்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More