
ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கவேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இன்றுகாலை கூடிய கட்சித்தலைவர்கள், மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்பதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இன்றுமாலை சந்திக்கும் போது, அதனை வலியுறுத்தவுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தகூட்டத்தின் போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பிலும் கட்சித்தலைவர்கள் ஆராய்ந்துள்ளனர்.
Spread the love
Add Comment