Home இலங்கை புதிய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை, உடனடியாக நியமிக்க வேண்டும்…

புதிய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை, உடனடியாக நியமிக்க வேண்டும்…

by admin

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உடனடியாக நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி கே. கணக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மகிந்த உள்ளிட்ட அவரது அரசாங்கம் அந்த பதவிகளை இனி மேலும் தொடர்ந்தால், அது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலான குற்றமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகிக்கவும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் , பிரதி அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சர்கள் அப்பதவியைத் தொடரவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More