Home இலங்கை மகிந்தவின் முட்டாள்தனமா அல்லது மகிந்தவை முட்டாள் ஆக்கினார்களா?

மகிந்தவின் முட்டாள்தனமா அல்லது மகிந்தவை முட்டாள் ஆக்கினார்களா?

by admin

கடந்த ஒக்ரோபர் 26 ஆம் ம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மஹிந்த ராஜபக்ஸ பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்துள்ளார் என ராஜபக்சக்களின் விசுவாசியான, சட்டவல்லுணர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் சட்டவாளராக இருந்த போது, தனது ஆலோசனைகளை, அவர் சரியாக நடைமுறைப்படுத்தி வந்தார் எனத் தெரிவித்த கோமின் தயாசிறி, தற்பொது பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, மஹிந்தவுக்கு யார் ஆலோசனை வழங்கினார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், இப்போது நடக்கும் அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அடுத்து, இலங்கையில் இப்போது பிரதமரும், அமைச்சரவையும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாடு மிகவும், மோசமான உறுதியற்ற நிலையில் இருக்கிறது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியே மிகவும், சரியான முடிவை எடுக்க வேண்டும். எனினும் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்வதற்கு அரசியலமைப்பில் வழியில்லை. ஆனால், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு சட்ட வழிமுறை உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More