Home இந்தியா மகாராஷ்டிராவில் 100 ஆண்டு பழமையான பாலம் வெடிவைத்து தகர்ப்பு :

மகாராஷ்டிராவில் 100 ஆண்டு பழமையான பாலம் வெடிவைத்து தகர்ப்பு :

by admin

மகாராஷ்டிர மாநிலத்தில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான பாலம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் கலு நதியின் குறுக்கே இரண்டு சிறிய மலைகளை இணைந்து இந்த பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சிதிலமடைந்து, கடந்த ஆண்டு மிகவும் மோசமானதையடுத்து இந்த பாலம் அபாயகரமான பாலம் என அறிவிக்கப்பட்டு, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட பொதுப்பணித்துறை முடிவு செய்ததன்படி வெடிவைத்து பாலம் தகர்க்கப்பட்டது.  பாலத்தின் அனைத்து பகுதிகளிலும் சக்திவாய்ந்த வெடிகள் பொருத்தப்பட்டு ஒரே சமயத்தில் வெடிக்கச் செய்யப்பட்டது. அதிகாலையில் பாலத்தை வெடிவைத்து தகர்த்த காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் பார்த்தனர்.

அந்த பாலம் இருந்த இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More